தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சீமான் ஆறுதல்
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி: தூக்குக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் செவ்வாய்க்கிழமை போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது.

இதையடுத்து மக்கள் கலெக்டர் வெங்கடேஷை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர். அப்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலையால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பக்கிசூட்டில் காயமடைந்த மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆறுதல் pic.twitter.com/7aHlLdNlf6
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) May 23, 2018
அவர்களை ஸ்டாலின், கமல், முத்தரசன், டி,ராஜேந்தர், திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அந்த வகையில் சீமானும் நேற்றைய தினம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications