மேட்டூர் அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை- செம்மலை எம்எல்ஏ புகார்
சொந்த தொகுதியான மேட்டூரில் உள்ள அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு தான் செல்லாதது குறித்து அத்தொகுதி எம்எல்ஏ செம்மலை விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மேட்டூரில் உள்ள அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு தான் செல்லாதது குறித்து அத்தொகுதி எம்எல்ஏ செம்மலை விளக்கம் அளித்துள்ளார்.
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தொப்பையாறு, பாலாறு ஆகியவற்றில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூருக்கு தண்ணீர் வரத்து 4,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையானது கடந்த 1934-ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது.

இந்த அணையில் தூர்வாரும் பணியை முதல்வர் இன்று தொடங்கிவைத்தார். அதில் தொகுதி எம்எல்ஏ-வான செம்மலை கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மேட்டூரில் செம்மலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், மேட்டூர் அணை தூர்வாரும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை.
என் தொகுதிதான் என்று மீறி சென்றாலும் அவமானம் ஏற்படும் சூழல் நிலவும். அணையை தூர்வாருவது நல்லதுதான். ஆனால் நோக்கம் நல்லதா என்று பார்க்க வேண்டும். சேலத்தில் உள்ள பணமரத்துக்குப்பட்டியில் ஏரி தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெறுகிறது.
நீர் நிலைகளில் வண்டல் மண் 1 மீட்டர்தான் இருக்கும். மீதமுள்ள செம்மண்ணும், சத்தான மண்ணும் தான். தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் அந்த பணியை கண்காணிப்பது யார்? விவசாயிகள் வண்டல் மண்ணை மட்டும் அள்ளி செல்வர்.
அதன் பிறகு உள்ள செம்மண்ணையும், சத்தான மண்ணையும் மணல் கொள்ளையர்கள் எடுத்துச் செல்வர். இந்த முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டுமானால் வண்டல் மண் அள்ளி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications