சென்னையில் உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்த சிங்கப்பூர் பெண் மரணம்
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் எடையை குறைக்க ஆபரேசன் செய்த சிங்கப்பூர் பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு ஆபரேசன் செய்ய வந்த சிங்கப்பூர் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த பெண்ணின் பெயர் அலிசா மிடியனின் கான், சிங்கப்பூரில் வசித்து வந்த இவர், 85 கிலோ உடல் எடை காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதிக எடையினால் சிரமப்பட்ட இவருக்கு திருமணமாகி குழந்தைபிறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன்காரணமாக உடல் குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள எஸ்.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அலிசா அனுமதிக்கப்பட்டார். அவரது கணவரும் உடன் வந்தார்.
அலிசாவிற்கு எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அலிசா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அலிசாவின் கணவர் ஏற்றுக்கொள்ளவில்லை .
அறுவை சிகிச்சை முடிந்த பிறகு , எனது மனைவியைப் பார்க்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று அலிசாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். அலிசாவை வென்டிலேட்டரில் வைத்துள்ளதாகவும் , மேலும் பரிசோதனை நடந்து வருவதாகவும் டாக்டர்கள் கூறினர். இப்போது இறந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இது மருத்துவர்களின் தவறால் ஏற்பட்ட மரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை சம்பவங்கள் தோல்வியடைவது அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது தனியார் மருத்துவமனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரிகள் உடல் குறைப்பு அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். அதில் மூத்த சகோதரி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications