அதிகம் படித்த ஆண்கள் இருக்கும் மாவட்டம் எது தெரியுமா.. 2011 சென்சஸ் சொல்றத பாருங்க
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆண்களை விட சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்களே அதிகம் படித்தவர்கள் என்று 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவி
சென்னை: 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை விட அதிக அளவில் கல்வியறிவு வளர்ச்சி அடைந்துள்ளது.
2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற ஆண்களின் படிப்பறிவு விகிதம் கண்டறியப்பட்டது. அதன்படி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் கல்வியறிவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஆண்களின் கல்வியறிவு 86.81 சதவீதமாக உள்ளது. இதில் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஆண்களின் கல்வியறிவு 82.08 சதவீதமாகவும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆண்களின் கல்வியறிவு 91.82 சதவீதமாகவும் உள்ளது.

முதலிடம்
இதில் அனைத்து மாவட்டத்தையும் என்று எடுத்துக் கொண்டால், கன்னியாகுமரி மாவட்டமே 93.86 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 93.47 சதவீதம் பெற்று சென்னை 2வது இடத்திலும், 92.15 சதவீதம் பெற்று நீலகிரி மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளது.

கடைசி இடம்
ஒட்டு மொத்த மாவட்டத்தையும் எடுத்துக் கொண்டால் தர்மபுரி மாவட்டம் 69.16 சதவீதம் கல்வியறிவு பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டம் 79.65 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு சற்று முன்பாக உள்ளது.

நகர்ப்புறம்
இதே போன்று, நகர்ப்புற ஆண்கள் பெற்ற கல்வியறிவு விகிதத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் தலா 94.17 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளன. 94.15 சதவீதம் எடுத்து கன்னியாகுமரி 2வது இடத்திலும், 94.08 சதவீதம் பெற்று நாகப்பட்டினம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதிலும் தர்மபுரி மாவட்டம் 78.17 சதவீதம் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

கிராமப்புறம்
நகர்ப்புற ஆண்களின் கல்வியறிவு விகிதத்தைப் போன்றே கிராமப்புற ஆண்கள் படிப்பறிவும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, 92.49 சதவீதம் ஆண்கள் கல்வியறிவு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக நீலகிரி மாவட்டம் 89.87 சதவீதம் எடுத்து இரண்டாவது இடத்திலும், 88.85 சதவீதம் எடுத்து தூத்துக்குடி மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளது. இதிலும் 67.3 சதவீதம் பெற்று தர்மபுரி மாவட்டமே கடைசி இடத்தில் உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications