சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்... ரூ.60 கோடி நஷ்டம்!
சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடைபெறுகிறது 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ. 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்: சிவகாசியில் 5வது நாளாக பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் நீடிப்பதால் ரூ. 60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 450 தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர்.
நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரி 2015ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் கூடுதலாக புதிய மனுவை மனுதாரர்க்ள தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் எதிரொலியாக பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு உற்பனையாளர்கள் சிவகாசி உற்பத்தியாளர்களிடம் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு தளர்வு கோரி சிவகாசியில் 5 நாட்களாக தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 5வது நாளாக போராட்டம் நீடிப்பதால் 450 தொழிலாளர்கள் பணியில்லாமல் தவிக்கின்றனர். சுமார் 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ரூ 60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications