செங்கல்பட்டு, ஆம்பூரில் லேசான நில அதிர்வு.. கர்நாடகா விஜயபுராவிலும் அதிர்ச்சி.. மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரத்தை மையமாக வைத்து இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.

செங்கல்பட்டில் உள்ள மகேந்திரா வேர்ல்ட் சிட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அஞ்சூர், புளிப்பாக்கம், பரனூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இன்று காலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Slight earthquake in Chengalpattu and Bangalore panicked people

முன்னதாக கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் காலை 6.58 மணிக்கு 3.2 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் செங்கல்பட்டிலும், ஆம்பூரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

காலை 7.39 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு 3.2 ரிக்டர் அளவு கோலில் பதிவானது. செங்கல்பட்டை அடுத்து ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். நிலநடுக்கத்திலும் பொருள் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் நேபாளம், ஆப்கானிஸ்தான், உத்தகாண்ட் மாநிலத்தில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் இன்றைய தினம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. லேசான நில அதிர்வு என்பதால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+