கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டம்... சமூக ஆர்வலர் கைது
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் பெரியார் மணியை போலீஸார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு இம்மிடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி(34). சமூக ஆர்வலரான இவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிச்சை எடுக்கும் போராட்டதில் ஈடுபட்டார். அப்போது, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசு இலவச புத்தக பை, மற்றும் காலணிகளை வழங்கவில்லை எனகூறி போராட்டம் நடத்தினார். பிச்சை எடுத்த சுமார் ரூ.1000 பணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் செல்ல முயன்ற அவரை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது குறித்து பெரியார் மணி கூறுகையில்,
கடந்த 6 மாதங்களுக்கு இதேபோல, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கப்போவதாக போராட்டம் நடத்தினேன். அப்போது கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆனால் இன்னும் ஏழை குழந்தைகளுக்கு, காலணி புத்தகப்பை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இந்நிலையில், பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி, அந்த பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்தேன். அப்போது போலீஸார் என்னை கைது செய்து விட்டனர் என்று கூறினார்.
கைதான பெரியார் மணி, மீது அரசுக்கு எதிராக செயல்படுவது, அரசை இழிவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications