அரசு மருத்துவமனைகளில் யோகா, மசாஜ் சிகிச்சை... விரைவில் அறிமுகம்!
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை மையம் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
மாறிவரும் உணவுப் பழக்கத்தினாலும், அவசர கதியினாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். வருகின்றன.

இந்த மன அழுத்தத்தைபோக்கவும், மன அழுத்தம் வராமல் தடுக்கவும் யோகா கலை உதவுகிறது. தினமும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில் பலர் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் தேவைப்படுகிறது. அனைவராலும் அதிக பணம் செலவு செய்து இவற்றை பெற முடிவதில்லை.
இதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாடு சட்டசபை விதி 110ன் கீழ் ஒரு அறிவிப்பில் ரூ.9 கோடியே 60 லட்சம் செலவில் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இந்த யோகா மற்றும் இயற்கை சார்ந்த வாழ்க்கைத்தர சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.
18 மருத்துவக்கல்லூரிகளிலும் ஒரு உதவி மருத்துவர் உள்ளிட்ட 4 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையம் அமைக்க நோயாளிகள் அறை, யோகா அறை ஆகியவறை அமைக்கப்படுகிறது. மேலும் நீர்வழி சிகிச்சை, மண்வழி சிகிச்சை, காந்த சிகிச்சை, மசாஜ் சிகிச்சை, கலர் சிகிச்சை, மின் சிகிச்சை, அக்குபஞ்சர் சிகிச்சை, தேக பயிற்சி சிகிச்சை ஆகியவையும் அளிக்கப்பட உள்ளது.
இதுபோன்ற வசதி அனைத்தும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications