பிளாஸ்டிக் தவிர்ப்போம் "சிறப்பு குழந்தைகள்" விழிப்புணர்வு ஓட்டம்
பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் நவம்பர் 14ம் தேதி விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை: பிளாஸ்டிக் இயற்கைக்கு கேடு விளைவிப்பவை. சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவை. மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உண்டாக்கும். எளிதில் அழியாது. எனவே, பயன்படுத்தாதீர்' என என்னதான் கோஷம் போட்டாலும், பிளாஸ்டிக் அரக்கன் அழிந்தபாடில்லை.
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள் தொடங்கி பெரிய கார் பாகங்கள் வரையில் இன்று பிளாஸ்டிக் இல்லாத பொருள்களே இல்லை என்றாகி விட்டது. விலை குறைவு, எடை குறைவு, உலோகத்துக்கு இணையான வலிமை போன்ற காரணங்களால் ஆரம்ப காலங்களில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது இந்த பிளாஸ்டிக். இன்று புலி வாலைப் பிடித்த கதையாக மாறிவிட்டது. பிளாஸ்டிக் தவிர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற முழக்கத்தை முன்வைத்து குழந்தைகள் தினத்தன்று சிறப்பு குழந்தைகள் பங்கு பெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வரும் இந்த பிளாஸ்டிக் அழிய பல நூறு ஆண்டுகள் ஆகும். ஆதலால்தான் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, பழுதற்ற உலகை விட்டுச் செல்வோம் என்ற எண்ணத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம் என அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வீதி, வீதியாக கோஷத்துடன் வலம் வருகின்றன.

குழந்தைகள் தினம்
சென்னையில் 4 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் கே.ஆர்.எம். பள்ளி குழுமங்கள் சார்பில் செயல்படும் கே.ஆர்.எம். சிறப்பு பள்ளி சார்பில் பிளாஸ்டிக் அபாயம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தன்று விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.

விழிப்புணர்வு ஓட்டம்
சென்னை மெரீனா கடற்கரை கண்ணகி சிலையில் தொடங்கி விவேகானந்தர் இல்லம்வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரம் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டு கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள்
நடிகர் எஸ்வி சேகர், வசீகரன் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக வி.ஜி பி.சந்தோஷம், திலகவதி ஐ.பி.எஸ்,டிராபிக் ராமசாமி, வெள்ளையன், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, மனுஷபுத்திரன், ஜோதிபாசு, எக்ஸ்னோரா நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு குழந்தைகள்
இந்த சிறப்பான விழிப்புணர்வு ஓட்டத்தில் 23 சிறப்பு பள்ளிகளை சேர்ந்த பிள்ளைகளை பங்கு பெறச்செய்யும் பணியை ஒருங்கிணைத்து செயல்படுத்திய கே.ஆர்.எம்.சிறப்பு பள்ளியின் இயக்குனர் நர்த்தனா முடிவில் நன்றி கூறினார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications