கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Recommended Video

சென்னை: நக்கீரன் கோபாலை விடுவிக்காவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நக்கீரன் கோபால் கைது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பார்ப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்கு வந்தார் மு.க.ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நக்கீரன் கோபால் கைது கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீதான வழக்குகளை ரத்து செய்து உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோபாலை விடுவிக்காவிட்டால் இந்த அரசு விபரீதமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தமிழகத்தில் உள்ள அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. நக்கீரன் கோபால் மீது பாய்ந்த வழக்கு ஏன் எச். ராஜா மீது பாயவில்லை. ஏன் எஸ்.வி.சேகர் மீது பாயவில்லை.
அறநிலையத்துறை ஊழியர் குடும்பங்களை கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. நீதிபதிகளையும், காவல்துறையினரும் கொச்சைப்படுத்திப் பேசியவர் எச். ராஜா. தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்று முழங்கியவர் எச். ராஜா. ஆனால் ஏன் அவர் மீது தேசதுரோக வழக்குப் பாயவில்லை.

ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை களங்கப்படுத்தியவர் எஸ்.வி.சேகர். ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை. போலீஸ் துணையோடு எச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் வலம் வந்ததை நாடே பார்த்தது. பாஜகவுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். இதுவரை நேரம் கொடுக்கப்படவில்லை. நேரம் கொடுக்கப்படும்போது ஆளுநரை சந்தித்து அனைத்தையும் விளக்குவோம் என்றார் மு.க.ஸ்டாலின்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications