தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர் சாவு - அண்ணா பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்
சென்னை: தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து இறப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணாபல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை அருகே சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் அபிநாத் கல்லூரி வளாக கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுபோல இந்த வருடம் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் மர்மமான முறையில் கல்லூரி வளாகத்தில் பிணமாக கிடந்தனர்.

இதையொட்டி கல்லூரிகளில் மாணவர்களின் சாவுகளை தடுக்கக்கோரி சாய்ராம் கல்லூரி உள்ளிட்ட சில தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று அண்ணாபல்கலைக்கழகம் முன்பு கூடினார்கள்.
அவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதையொட்டி அண்ணாபல்கலைக்கழக மெயின் வாசல் அருகே மாணவர்கள் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலர், "சாய்ராம் கல்லூரியில் மாணவர் அபிநாத் இறந்ததுபோல இந்த வருடம் சமீபத்தில் மட்டும் 4 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் அண்ணாபல்கலைக்கழகம் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கட்ட முடியாமல் மாணவர்கள் திணறுகிறார்கள்.
பஸ் கட்டணம், சாப்பாட்டு கட்டணம் என்று பல்வேறு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. மேலும் சாப்பாடு சாப்பிடுவது மாணவர்களின் விருப்பம் என்று அண்ணாபல்கலைக்கழகம் சொல்லவேண்டும்.
மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரு கமிட்டியை அரசு அமைக்கவேண்டும். அந்த கமிட்டியில் அண்ணாபல்கலைக்கழக அதிகாரிகள், கல்லூரி நிர்வாக பிரதிநிதிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெறவேண்டும். முதல் கட்டமாக சாய்ராம் கல்லூரியில் படித்த மாணவர் அபிநாத் சாவு பற்றி விசாரிக்க கமிட்டி அமைக்கப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் மதுமதி, அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன் ஆகியோர் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி ஆணைய அலுவலகத்திற்கு மாணவர்கள் சிலரை அழைத்து பேசினார்கள். இதையொட்டி மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications