கட்டண உயர்வை சமாளிக்க வாடகை வீடுகளுக்குத் தனி மீட்டர்... மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரிடம் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும். வாடகைதாரர் மீட்டர் கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது. உரிமையாளர் தனி மீட்டர் பொருத்த மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் மின்கட்டணம் இன்றுமுதல் 15 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சொந்த வீடுகளில் வசிப்பவர்களை விட வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் பாடுதான் திண்டாட்டம்.

காரணம் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அரசு நிர்ணயிப்பதை விட அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
சென்னையில் 1 யூனிட்டுக்கு 8ரூபாய் வரை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாங்கி விடுகிறார்கள். காரணம் கேட்டால் ஒரே மீட்டரில்தான் யூனிட் பதிவாகிறது. அதனால் அதிகம் வாங்குகிறோம் என்று கூறி சமாளிக்கிறார்கள். அதாவது வீட்டு உரிமையாளரின் கரண்டு பில்லையும் சேர்த்து வாடகை வீட்டில் இருப்பவர்கள் கட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று முதல் மின் கட்டணம் 15 சதவீதம் உயர்ந்துள்ளதால் வீடுகளில் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களுக்கு மின் கட்டணம் இனிமேல் உச்சத்தை தொடும். அவர்கள் 1 யூனிட்டுக்கு 4 ரூபாயில் இருந்து ரூ.4.60 ஆக உயர்த்தி கட்ட வேண்டும். இதில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட கூடுதலாக பணம் கொடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.
சென்னையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் 1 யூனிட்டுக்கு 5ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கொடுக்கின்றனர். 2 மாதத்துக்கு 120 யூனிட் பயன்படுத்தினாலே வாடகைக்கு இருப்பவர்களிடம் யூனிட்டுக்கு 7ரூபாய் வீதம் 840 ரூபாயை வீட்டு உரிமையாளர் வசூலித்து விடுவார்கள். இதில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் வாடகைக்கு இருப்பவர்கள் வீட்டு உரிமையாளரிடம் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும்.
இதற்கு செலவு சிங்கிள் பேஸ் மீட்டருக்கு ரூ.1650 தான் டெபாசிட் கட்டணம். த்ரி பேஸ் (மும்முனை மின்சாரம்) மீட்டருக்கு ரூ.7500 கட்டணம் டெபாசிட் மின்வாரியத்தில் கட்டினால் வாடகை வீடுகளுக்கு தனித்தனி மீட்டர் கொடுத்து விடுவோம். வாடகைதாரர் மீட்டர் கேட்டாலும் கொடுப்போம்.
எனவே பொது மக்கள் வாடகை வீடு பார்க்கும் போது தனி மீட்டர் இருக்கிறதா? என்பதை பார்த்து தான் குடியேற வேண்டும். இல்லாவிட்டால் தனி மீட்டர் பொருத்த சொல்ல வேண்டும். உரிமையாளர் தனி மீட்டர் பொருத்த மறுத்தால் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications