தமிழக மின்வாரியம் தனியாரிடம் ரூ 27, 147 கோடிக்கு மின்சாரம் வாங்குகிறது!
சென்னை: தமிழக மின்வாரியம் நடப்பு நிதியாண்டில் ரூபாய் 27 ஆயிரத்து 147 கோடிக்கு மின்சாரம் வாங்க திட்டமிட்டுள்ளது. இதில் 4 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் மின் பற்றாக் குறையைப் போக்க, பல்வேறு திட்டங்களை தமிழக மின் வாரியம் மேற்கொண்டுள்ளது.

மின்சாரம் வாங்கும் தமிழகம்:
தனியார் காற்றாலைகள், மத்திய மின் நிலையங்கள், சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிலையங்கள், சூரிய சக்தி, தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கு விநியோகித்து வருகிறது.
27 ஆயிரத்து 147 கோடி:
இந்நிலையில் இந்த வருடத்திற்கான மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூபாய் 27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது.
அதிகபட்ச விலை நிர்ணயம்:
இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட குறிப்பிட்ட 4 தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கு கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
நஷ்டத்திற்கான காரணம்:
தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவீதத்தை மின்சாரம் வாங்குவதற்கே செலவிடுவதால்தான் நஷ்டம் அதிகரித்து வருவதாக மின் நுகர்வோரும், தொழில்துறையினரும் தெரிவிக் கின்றனர்.
நியாமான விலை நிர்ணயம்:
தனியார் நிறுவனத்தில் மின்சாரம் வாங்குவதற்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் வாரியம் முறைப்படி அனுமதி பெற்று நியாயமான விலை நிர்ணயித்து வாங்க வேண்டும்.
அதிகபட்ச கொள்முதல்:
ஆனால், ரூபாய் 5.50 க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நஷ்டம் அதிகரிக்கும் என்று ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்த நிலை யிலும், கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து எந்த அத்திவாசியமும் இல்லாத நிலையில், அதிகபட்சமாக ரூபாய் 15 க்கு மின்சாரம் வாங்கி 200 கோடி நஷ்டமடைவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications