குற்றவாளி சசிகலாவை சந்தித்த அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.. தமிழருவி மணியன்
தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்: தண்டிக்கப்பட்ட குற்றவாளியான சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எக்காரணத்தை கொண்டும் சிறைச்சாலைக்கு சென்று சசிகலாவை சந்திக்க கூடாது என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன் சனிக்கிழமை வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மக்களுக்கான சந்தேகம் தீரவில்லை. அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னரே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இந்த சந்தேகத்தை தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எந்நேரத்திலும் தேர்தல் வருவதற்க்கான வாய்ப்புகள் உள்ளது. தேர்தலை சந்திக்கின்ற அதிமுக இரு அணிகளும் தோல்வியை தழுவும், தமிழகத்தை ஆட்சி செய்து வருவது குற்றவாளி சசிகலா தான். குற்றவாளியை சிறைச்சாலைக்கு சென்று பார்த்து வந்த 3 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எக்காரணத்தை கொண்டும் சிறைச்சாலைக்கு சென்று குற்றவாளியை சந்திக்க கூடாது. தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியால் எந்த பயனும் கிடையாது, பாஜகவால் தமிழகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஆட்சி அமைக்க முடியாது. இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications