பயந்தது நடந்துவிட்டது.... தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் மோதி ஒருவர் பலி - 4 பேர் காயம்
விருதாச்சலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய பேருந்து விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.
கடலூர்: விருதாச்சலம் அருகே அரசு பேருந்தும், இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார், சிறுமி உள்பட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 4வது நாள் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்காமல் முடங்கியுள்ள நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக தற்காலிக நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த தற்காலிக பணியில் மணல் லாரி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உள்ளிட்டோரை அரசு நியமிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி இருந்தனர். இந்நிலையில் இதனையெல்லாம் மறுத்த அரசு, மக்களின் வசதிக்காகவே இதனை செய்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் விருதாச்சலம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிச் சென்ற பேருந்து இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சியான் என்ற நபர் சம்பவ இடத்திலே பலியானார். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி சாராவும், சாமுவேல் என்பவரும் பலத்த காயத்துடன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக ஓட்டுனர்களை மக்கள் வசதிக்காக நியமிப்பதாக கூறிய அரசு, மக்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் மாநிலம் முழுவதும் பல விபத்துகள் ஏற்படும் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications