அசுத்தமாகும் தாமிரபரணி... மாணவர்களுடன் கைகோர்க்கும் சமூக ஆர்வலர்கள்
தாமிரபரணியில் குவியும் அசுத்தங்கள் நாளுக்குநாள் அதிகமாவதால், கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
நெல்லை: தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலந்து அசுத்தமாகி வருவதால் அதைத் தூய்மைப்படுத்த மாணவர்களுடன் கைகோர்த்து செயல்பட சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீப காலமாக தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், ஹோட்டல் கழிவுகள் அதிக அளவில் தாமிரபரணியில் கலந்து மாசுப்பட்டு வருகிறது. இதை தடுக்கவும், தாமிரபரணியைப் பாதுகாக்கவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், " 11 இடங்களில் கழிவு நீர் கலப்பதும், பல இடங்களில் திறந்த வெளி கழிப்பறையாக பயன்படுத்து வதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதிகளில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. திறந்த வெளி கழிப்பிடத்தை தடுப்பது, கழிவுநீர் கலப்பதை தடுப்பது, ஆகாய தாமரை செடிகளை அகற்றுவது போன்ற பணிகளை தனியார், அரசு துறை பங்களிப்புடன் மாணவ, மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது" என்ற முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இனி ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாமிரபரணியில் தூய்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications