முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது தி சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டடம்!
தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டுள்ளது.
சென்னை தீ விபத்துக்குள்ளான தி சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டுள்ளது. இதன் இடிபாடுகளை அகற்றும் பணி நாளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த தீயை 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தால் 7 அடுக்குகளை கொண்ட அந்தக் கட்டடம் எலும்புக்கூடானது. பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அன்றே முடிவு
கட்டடத்தின் பெரும்பாலன பகுதிகள் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்தக் கட்டடத்தை இடிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முற்றிலும் உறுதியிழந்து நின்ற அந்தக்கட்டடத்தை இனியும் விட்டு வைப்பது ஆபத்து எனக்கூறப்பட்டதால் கட்டத்தை கடந்த ஒன்றாம் தேதி மாலையே இடிக்க முடிவு செய்தனர்.

2ஆம் தேதி தொடங்கிய பணி
இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 2 ஜா கட்டர் எந்திரங்களை பயன்படுத்தி 7 அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு வந்தது.

3 நாட்களுக்குள் இடிக்கப்படும்
3 நாட்களுக்குள் இந்தக் கட்டடம் இடித்து தரை மட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் இடிக்கும் பணி இடையிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் இடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

முழுவதும் இடிப்பு
அப்போது இடிக்கப்படாத கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில் அடுக்குமாடிக் கட்டடம் இன்று முழுவதும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அகற்றும் பணி
அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு வராத வகையில் கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் கட்டத்தின் இடிபாடுகளை நீக்கும் பணி நாளை தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications