கஞ்சா விதை கொடுங்க.. கலெக்டருக்கு ஷாக் கொடுத்த கடலூர் விவசாயி!
குறைதீர் கூட்டத்தில் கஞ்சா விதைகளை கேட்ட விவசாயி.
கடலூர்: விவசாயிகளின் குறைகளை தீர்க்கத்தான் வார வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இங்கு விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை வாய்மொழியாகவும் அல்லது மனு மூலமாகவும் கோரிக்கையாக வழங்குவார்கள். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூரில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் ஒரு விவசாயி பரபரப்பைக் கிளப்பினார்.
இப்படித்தான், கடலூர் மாவட்டத்தில் விவசாயக் குறைகேட்பு கூட்டம் இன்று நடந்து கொண்டிருந்தது. கலெக்டர் தண்டபாணி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தி கொண்டிருந்தார். எல்லோரும் தங்களது கோரிக்கைகளை சொல்லி வந்தனர். திடீரென ஒரு விவசாயி எழுந்தார். "எனக்கு கஞ்சா விதை வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும் கலெக்டர் முதல் எல்லோருக்குமே பெரிய ஷாக்.

தொடர்ந்து விவசாயி பேசும்போது, "ஆங்கில மருத்துவத்தின் மூலம் சில நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நோய்கள் தீர்க்கப்படுகின்றன. கஞ்சா இலை சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு கஞ்சா செடிகளை பயிரிடுவதற்காக கஞ்சா விதைகளை வழங்க வேண்டும்" என்றார்.
பின்னர் சுதாரித்து பேசிய கலெக்டர் தண்டபாணி, கஞ்சா பயிரிடுவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கெல்லாம் அரசு அனுமதி வழங்காது. எனவே கஞ்சா செடி பயிரிடக்கூடாது என்றார். கஞ்சா விதைகளை கேட்ட அந்த விவசாயியின் பெயர் குமரகுரு என்பதாகும். கஞ்சா செடி வளர்க்க கனடா நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதை போலவே இந்தியாவிலும் சித்த மருத்துவத்துக்கு கஞ்சா செடிகளை விதைத்தால் ஏராளமான நோய்கள் குணமாக்கப்படும் என்று சொல்கிறாராம் இவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications