நாப்கின்களால் மாசாகும் சுற்றுச்சூழல் - மனுவின் மீதான தீர்ப்பினை தள்ளி வைத்தது பசுமை தீர்ப்பாயம்!
சென்னை: நாப்கின் மற்றும் டயாபர் துணிகளால் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தொடரப்பட்ட தீர்ப்பின் வழக்கினை பசுமை தீர்ப்பாயம் தள்ளி வைத்துள்ளது.
சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஜி.விஜயகுமார் தாக்கல் செய்த மனுவில், "மும்பையில் இயங்கும் பிராக்டர் அண்டு கேம்பிள், ஜான்சன் அண்டு ஜான்சன், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ், குபிக் பயோசயன்ஸ், ராயல் ஹைஜீன் மற்றும் புனேயில் உள்ள கும்பர்லி கிளார்க் லீவர் ஆகிய நிறுவனங்கள், பெண்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சானிட்டரி நாப்கின் மற்றும் டயாபர் ஆகியவற்றை தயாரிக்கின்றன.

இந்த பொருட்களில் மரக்கூழ், எஸ்.ஏ.பி. என்ற பாலிமர் வேதிப்பொருள், பாலி எத்திலின் திரை, என்றுமே அழியாத பிளாஸ்டிக் ஆகியவை வைக்கப்படுகின்றன. அவற்றை வெண்மையாக்குவதற்காக குளோரின் பிளீச்சும் செய்யப்படுகிறது. உபயோகத்துக்கு பின் ஆங்காங்கே அவை வீசப்படுகின்றன.
அந்த நாப்கின் மற்றும் டயாபரில் உள்ள வேதிப்பொருட்களால், நீர்நிலைகள், நிலங்கள் என பல்வேறு பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது. இன்செனரேட்டர் என்ற கருவி மூலம் எரித்தால்கூட, காற்றை அது மாசுபடுத்துகிறது.
இதனால் தேச அளவில் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 15 லட்சம் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உபயோகப்படுத்தப்பட்ட இவற்றை வாங்கி, சுற்றுச்சூழல் கெடாதவாறு பாதுகாப்பாக அழிப்பதற்கான அறிவியல்சார் வழிமுறையை வகுப்பதற்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி எம்.சொக்கலிங்கம், பி.எஸ்.ராவ் ஆகியோர் நேற்று விசாரித்தனர். மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications