வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளலாம்.. புதிய ஆப் அறிமுகம்!
வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளும் முறையை சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை: வழக்கு விவரங்களை போனிலேயே தெரிந்துகொள்ளும் டிஜிட்டல் முறையை சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான டிஜிட்டல் மையம் சென்னை ஹைகோர்ட்டில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழக்கு விவரங்க்ளை டிஜிட்டல் மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்துள்ளது. அதன்படி ஹைகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் கலந்து கொண்டு மையத்தை திறந்து வைத்தார்.

ஆவணங்கள் பாதுகாப்பு அவசியம்
அதேபோன்று சமரசம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதித்துறைக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும் என்றார்.

புதிய ஆப் அறிமுகம்
வழக்கு விவரங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் ஆவணங்களை காகிதங்களாக வைக்கும் இடம் மிச்சமாகும் என்றும் அவர் கூறினார். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் ஆப்பை சுப்ரீம் கோர்ட் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த வாரம் முதல்
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதி லோகூர் கூறினார். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

3 லட்சம் பேர் இணைப்பு
அதேபோன்று இ-மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் அதில் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளதாகவும் நீதிபதி லோகூர் தெரிவித்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications