மெர்சல் படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படாது.. தயாரிப்பாளர் அறிவிப்பு
மெர்சல் படத்திலிருந்து எந்த வித காட்சிகளும் நீக்கப்படாது என்று தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெர்சல் படத்திலிருந்து எந்தவித காட்சிகளும் நீக்கப்படாது. எந்த வசனமும் மியூட் செய்யப்படவும் இல்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். இதில் மருத்துவர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த்தனைக்கு எதிராகவும் வசனங்கள், காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகளுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டன.

தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை
இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருக்கையில், மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானதால் மிகுந்த மனவேதனையை தருகிறது. தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்தை அகற்றவும் தயாராக உள்ளோம். மெர்சல் படம் யாருக்கும் எதிரானதல்ல. அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் படம் அல்ல. சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கரு ஆகும்.

நீக்கத் தயார் என முதலில் அறிவிப்பு
சர்ச்சைகள் குறித்து பாஜகவின் தலைவர்களிடம் விளக்கம் அளித்துள்ளோம். அந்த விளக்கத்தை அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே தேவைப்பட்டால் சில காட்சிகளை நீக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தனர்.
|
இரவில் மறுப்பு
இதனால் இன்னும் ஓரிரு நாள்களில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து காட்சிகளை நீக்குவதற்காக தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த முடிவில் திடீர் திருப்பமாக படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் பக்கத்தில் காட்சிகளை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

எந்த சீனும் நீக்கம் இல்லை
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், மெர்சல் படத்திலிருந்து எந்த ஒரு காட்சியையும் நீக்குவதோ அல்லது அவற்றின் ஒலியை நிறுத்துவதோ (மியூட்) செய்யப்படாது. இந்த காட்சிகளுடன் தளபதி விஜய் ரசிகர்கள் படத்தை ரசிக்கலாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் மிரட்டலுக்கு தேனாண்டாள் பிலிம்ஸ் அடிபணிந்து விட்டதோ என்று ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில் ஹேமா ருக்மணியின் டுவீட்டானது ரசிகர்களுக்கும் நடுநிலைவாதிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications