வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் : தடுத்து நிறுத்தக்கோரி பாஜக போலீஸில் புகார்
வைகோவின் நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு நடைபயணத்தை தடுத்து நிறுத்தக்கோரி பாஜக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
Recommended Video

தேனி : நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்தை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட பாஜகவினர் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆய்வு நடத்த ஆய்வுமையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் துவக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டால், தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மதுரையில் இருந்து தேனி வரையிலான நியூட்ரினோ ஆய்வுத் திட்ட எதிர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வைகோவின் இந்த நடைபயணத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று தேனி மாவட்ட பாஜக சார்பில் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகார் மனுவில், வைகோ சட்டம் ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் தேனி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று ஆராய்ச்சிக்குழுவினர் தெளிவாக அறிக்கை அளித்து இருக்கும் நிலையில், வைகோ தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார். இதனால் தேனி மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு, எந்நேரமும் போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே வைகோவின் நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications