ஈரோடு: திருட வந்த வீட்டில் தவறி விழுந்த திருடன் பலி
ஈரோடு: ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் திருட முற்பட்ட போது, முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி. உடல் நலக் கோளாறு காரணமாக இவரது மனைவி முத்துகிருஷ்ணம்மாள், கோவையில் உள்ள தனது மகன் சண்முகவேல் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று மனைவியை பார்ப்பதற்காக கோவை சென்ற பொன்னுசாமி இரவு அங்கேயே தங்கிவிட்டார். மறுநாள் இரவு ஈரோடு திரும்பிய பொன்னுசாமி, தனது வீட்டின் முன்பகுதியில் கம்பிகள் மற்றும் கடப்பாரை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, பொன்னுசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, முன் பகுதியில் உள்ள கூரை ஓடுகள் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதன் வழியாக யாரோ வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள் என்பதை யூகித்த அவர், வீட்டின் மேல்தளத்திற்குச் சென்று பார்த்துள்ளார்.
அங்கே, முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி, உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இறந்தவர், நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (60) என்பதும், அவருக்கு இப்பகுதியில் விவசாய நிலம் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், பொன்னுசாமி கோவை செல்வதை அறிந்த கோவிந்தசாமி திருட வந்திருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக மரணமடைந்திருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
.
இதையடுத்து கோவிந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications