போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிக்கிறது: திருமாவளவன் காட்டம்!
ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பழைய பென்ஷன், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது. ஆனால், தடையை மீறி அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விமர்சித்த நீதிபதிகள்
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை கடுமையாக விமர்சித்தனர்.

போராட்டம் வாபஸ்
அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

எல்லை தாண்டி விமர்சிக்கிறது
இந்நிலையில் நீதிமன்றங்களின் விமர்சனம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து நீதிமன்றம் எல்லை தாண்டி விமர்சிக்கிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நம்பிக்கையை கெடுக்கும்
நீதிமன்றத்தின் கருத்து சொல்லும் போக்கு மக்களுக்கும் சட்டத்திற்கும் எதிராக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் நீதிமன்றங்கள் வெளிப்படையாக கருத்து கூறுவது மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications