For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவண்ணாமலை மலைகளில் இரும்புத்தாது எடுக்க 'டிம்கோ' புது விண்ணப்பம்! மீண்டும் வெடிக்கிறது பிரச்சனை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருவண்ணாமலை கவுத்தி- வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் மற்றும் தமிழக அரசின் கூட்டு நிறுவனமான டிம்கோ மீண்டும் விண்ணப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் கவுத்தி- வேடியப்பன் மலைகளில் நேற்று ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே இருப்பது கவுத்தி- வேடியப்பன் மலைகள். இம்மலையில் இரும்புத் தாது எடுக்க ஜிண்டால் குழுமம் 2008-09 ஆம் ஆண்டு முயற்சித்தது. இதற்காக ஜிண்டால் குழுமமும் தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் இணைந்து டிம்கோ நிறுவனத்தை உருவாக்கி இருந்தது. இதில் ஜிண்டால் குழுமத்துக்கு 99% பங்குகளும் டிட்கோவுக்கு 1% பங்கும் இருக்கின்றன.

thiruvannamalai

ஆனால் அப்போது மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால் ஜிண்டால் குழுமத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் கவுத்தி-வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது எடுக்க டிம்கோ விண்ணப்பித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் ஜெயகிருஷ்ணன் நேற்று கவுத்தி- வேடியப்பன் மலைப் பகுதிகளில் இரும்புத் தாது குறித்து ஆய்வு நடத்திச் சென்றார்.

இதனால் கவுத்தி-வேடியப்பன் மலைகளைப் பாதுகாக்க வேண்டும்.. இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

English summary
P.V.Jayakrishnan, Chairman of Central Empowered Committee, constituted by Supreme Court, visited Kavuthi-Vediyappan hills, found to have iron ore reserves, near here on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X