ஆர்எஸ்எஸ்காரர் ஜனாதிபதி வேட்பாளர் - எதற்காக பயந்தோமோ அது நடந்துவிட்டது: டிகேஎஸ் இளங்கோவன் அதிர்ச்சி
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். எதற்காக பயந்தோமோ அது நடந்து விட்டது என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பில் எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்து விட்டது என்று திமுக செய்தித் தொடர்பாளரும், ராஜ்ய சபா எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

கூட்டத்தில் முடிவு
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது: ஜனாதிபதி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. அதில் விவாதித்து ஜனாதிபதி யார் என்ற முடிவை எடுப்போம்.

ராம்நாத்தை திமுக ஆதரிக்காது
வெங்கய்ய நாயுடு திமுகவிடம் ஆதரவு கேட்டது என்பது வழக்கமான ஒன்றுதான். நாங்கள் அதற்கு ஆதரவு தர முடியாது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் திமுகவின் நிலைப்பாடு இருக்கும்.

தேர்தல்தான் தீர்மானிக்கும்
வெற்றி தோல்வி என்று பார்த்து எதையும் செய்ய முடியாது. ஜனாதிபதி தேர்தலில் யாரை முன் நிறுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு பெரும்பான்மை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அது தேர்தல் முடிவில்தான் தெரிய வரும்.

நடக்கக் கூடாதது..
ஜனாதிபதி தேர்தலில் எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ நடந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவரை பாஜக நிறுத்திவிட்டது. இது நடந்திருக்கக் கூடாது. அந்த வேட்பாளரை திமுக ஆதரிக்க முடியாது என்று டி.கே.எஸ். இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
2 இட்லி சாப்பிடவும் டெல்லி அனுமதி வேண்டுமா? தேசிய கட்சிகளின் பரிதாபம்! அப்ப அடுத்த முதல்வர் இவர்தானா -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு












Click it and Unblock the Notifications