எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை நிறுத்தக்கூடாது என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்லூரி உதவித் தொகையை நிறுத்தக்கூடாது என்றும் அதனை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக, கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசு உதவி தொகையை வழங்கும். ஆனால் அத்தகைய உவித்தொகை வழங்கப்படாது என்று சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி உதவித்தொகை மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பலனடைந்து கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாகவும், அதனால் மேல்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் கல்வி உதவிதொகையை நிறுத்தினால், உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
எனவே எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்கும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், உதவித்தொகை விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்றும் விதிகளில் மாற்றத்தை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கையாக விடுத்துள்ளார். மேலும் கல்வி உதவித்தொகையில் நிலுவை தொகையாக உள்ள ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாயையும் உடனடியாக விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications