எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையை நிறுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு உதவி தொகை நிறுத்தக்கூடாது என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்வி பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்லூரி உதவித் தொகையை நிறுத்தக்கூடாது என்றும் அதனை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பொதுவாக, கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசு உதவி தொகையை வழங்கும். ஆனால் அத்தகைய உவித்தொகை வழங்கப்படாது என்று சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்வி உதவித்தொகை மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பலனடைந்து கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாகவும், அதனால் மேல்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் கல்வி உதவிதொகையை நிறுத்தினால், உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.
எனவே எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைக்காமல் வழங்கும் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், உதவித்தொகை விதிகளில் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்றும் விதிகளில் மாற்றத்தை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கையாக விடுத்துள்ளார். மேலும் கல்வி உதவித்தொகையில் நிலுவை தொகையாக உள்ள ஆயிரத்து 803 கோடியே 50 லட்சம் ரூபாயையும் உடனடியாக விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications