கோடியக்கரை அருகே தமிழக மீனவர்களை அரிவாள் முனையில் மிரட்டி துரத்திய இலங்கை மீனவர்கள்!
தமிழக மீனவர்களை அரிவாள் முனையில் இலங்கை மீனவர்கள் விரட்டியடித்ததுடன் படகுகளில் இருந்த வலை, மீன்களையும் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் அரிவாள் முனையில் விரட்டியடித்துள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்த ரூ3 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் மீன்களையும் இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அத்ரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. 8 தமிழக மீனவர்களை நேற்றும் கூட கைது செய்து 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் 5,000 மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். இந்நிலையில் இன்று கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் அரிவாள் முனையில் தமிழக மீனவர்களை மிரட்டி துரத்தியுள்ளனர். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்து ரூ3 லட்சம் மதிப்பிலான வலை மற்றும் மீன்களைக் கொள்ளையடித்தும் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications