முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை
தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தமிழக அரசு உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து அதை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க ஆயத்தமாகி வருகிறது.
விரைவில் ஒரு அரசாணையைப் பிறப்பித்து அதன் பின்னர் 142 அடியாக அணையின் நீர்மட்ட அளவை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

முல்லைப் பெரியாறு அணையின் ஒரிஜினல் அதிகபட்ச முழுக் கொள்ளளவானது 155 அடியாகும். ஆனால் அணை பலவீனமாகி விட்டதாக கேரளா கூறிக் கூறியே அதை 136 அடியாக்கி விட்டது. இதற்காக ஒரு சட்டத்தையும் கொண்டு வந்து அடாவடித்தனம் செய்தது.
தற்போது கேரளாவின் சட்டத்தைத் தூக்கி குப்பைக் கூடையில் போட்டு விட்டது உச்சநீதிமன்றம். தமிழகம் அங்கு 142 அடி வரை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம். அணை பராமரிப்பையும் மேற்கொள்ளலாம் என்றும் கூறி விட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முஸ்தீபுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை முடுக்கி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் 136 அடி வரையில் உள்ள ஷட்டர்கள் 142 அடிக்கு உயர்த்தப்படும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகல் கைக்கு வந்தவுடன் இந்த வேலைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
ஒருவேளை இதை செய்வதற்கு கேரளத் தரப்பில் இடையூறு ஏற்படுத்தப்பட்டால் ராணுவத்தின் உதவியைக் கோரி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகலாம் என்றும் பேசப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications