மெட்ரோ ரயிலில் “டூரிஸ்ட் கார்டு” அறிமுகம்- பயணிகளைக் கவர புதிய நடவடிக்கை
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சுற்றுலா அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குறுகிய பகுதியான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல், பயண கட்டணமும், ரூபாய் 10 முதல் ரூபாய் 40 வரை நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் யோசிக்க தொடங்கினர். இதனால், மெட்ரோ ரயிலில் தினமும் பயணிப்போர் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்தது. மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நாள் வருமானம் கிட்டதட்ட ரூபாய் 3 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் 20 சதவீத கட்டண சலுகையுடன் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது 12 முறை (7 நாட்கள் செல்லத்தக்கது), 50 முறை (30 நாட்கள் செல்லத்தக்கது), 100 முறை (60 நாட்கள் செல்லத்தக்கது) என தொடர்ந்து பயணம் செய்யும் வகையில், பணத்தை ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்தது.
தற்போது சென்னை வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் சுற்றுலா பயண அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயண அட்டையை பெற ரூபாய் 150 செலுத்த வேண்டும். இதில் ரூபாய் 100 பயண கட்டணமாகவும், ரூபாய் 50 திருப்பித்தரத்தக்க முன்பணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். சுற்றுலா பயண அட்டை மூலம் மெட்ரோ ரெயிலில் ஒரு நாளில் ஒருவர் பல முறை பயணம் செய்யலாம். பயணம் செய்யும் அந்த ஒரு நாள் மட்டுமே செல்திறன் கொண்டது. சுற்றுலா பயண அட்டை வாங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications