கனமழை வெள்ளம் காரணமாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாலை 5 மணிக்கு புறப்படும் எழும்பூர் - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று 6 எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர் மழை, வெள்ளம் காரணமாக பல ரயில்கள் கடந்த ஒருவாரமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
ரேணிகுண்டா- கூட்டி வழித்தடத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி உள்ளதால் வண் எண் 17651 சென்னை எழும்பூரில் இருந்து கச்சிகுடாவுக்கு மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 16381 : மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 11073 :லோகமான்ய திலக் டெர்மினஸ் -சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 11041: மும்பை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 11028 : சென்னை சென்ட்ரல் - மும்பை எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 11018: காரைக்கால்-லோகமானிய திலக் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல் - மும்பை (11042) எக்ஸ்பிரஸ் ரயில் ரேணி குண்டா, பகாலா, தர்மாவரம் வழியாக திருப்பி விடப்பட்டது.
ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.