சிரித்த முகம் மிஸ்சிங்.. பத்திரிகையாளர்களிடம் கோபத்தில் சீறிய டிடிவி தினகரன்!
Recommended Video

சென்னை: பத்திரிகையாளர்கள் பேட்டியில் பொறுமை இழந்த நிலையில் காணப்பட்டார் டிடிவி தினகரன்.
வழக்கமாக சிரித்த முகத்தோடு பேட்டியளிக்கும் தினகரன், இன்று தனது இல்லத்தில் கோபத்தோடு பேட்டியளித்தார். அவர் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சாடுவதிலேயே குறியாக இருந்தார்.
எம்எல்ஏ பழனியப்பன் கைது செய்யப்பட்டுவிட்டதாக சில டிவி சேனல்களில் செய்தி வெளியானதை சுட்டிக் காட்டிய தினகரன், "இப்படிப்பட்ட செய்திகளை எங்களிடம் செக் செய்துவிட்டு ஒளிபரப்புங்கள். பரபரப்புக்காக எதையும் போட்டுவிட கூடாது. உங்களுக்கும், அண்ணன், தம்பிகள் உள்ளனர். பெற்றோர் வயிற்றில்தான் பிறந்துள்ளீர்கள். அவர்களுக்கு இப்படி நெருக்கடி ஏற்பட்டால் நீங்கள் இப்படித்தான் செய்திகள் போடுவீர்களா"? என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.

கைது இல்லை
மேலும், பழனியப்பன் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டதாக தகவலே இல்லை என்றும், இதுகுறித்து சிபிசிஐடி போலீசில் நீங்கள் விசாரித்தீர்களா என்றும் நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.

ஆங்கில கேள்வி
மற்றொரு நிருபர் ஆங்கிலத்தில், "உங்களுக்கு ஆதரவாக எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர்" என்று கேள்வி எழுப்பினார். இதனால் உச்சகட்ட கோபத்திற்கு போனார் தினகரன். ஏன், உங்களுக்கு தெரியாதா? என பதிலுக்கு கேள்வி எழுப்பினார். குடகில் எத்தனை பேர் உள்ளனர் சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார்.

ஊருக்கே தெரியும்
21 எம்எல்ஏக்கள் குடகில் உள்ளனர் என்பது உலகத்திற்கே தெரியும். விடிய விடிய ராமாயண கதை கேட்டுவிட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்வதை போல உள்ளது உங்கள் கேள்வி. ஆட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இல்லை. அதை மட்டும் நீங்கள் பாருங்கள்.

சாதாரண ஆள்தான்
ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் பெரிய ஆள் கிடையாது. நீங்களும் என்னை போன்றும், எல்லோரை போன்றும் சாதாரண மனிதர்தான். நான் எனது எம்எல்ஏக்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று முக்கிய குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் வேறு ஏதோ கேள்விகளை கேட்டு திசைதிருப்புகிறீர்கள். டிவி சேனல்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும். இவ்வாறு பொரிந்து தள்ளிவிட்டார் தினகரன்.

கோபத்தில் தினகரன்
சிரித்த முகத்தோடு எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்து வரும் வழக்கம் உள்ள தினகரன், நேற்றைய அதிமுக பொதுக்குழு கூட்டம், மற்றும் எடப்பாடி அணியின் அதிரடிகளால் கோபத்தின் உச்சியில் உள்ளார். அதை நிருபர்களிடம் காண்பித்து வருகிறார் என்றே தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications