தூத்துக்குடி மாநகராட்சிக் கூட்டம் வழக்கம் போல மூன்றே நிமிடங்களில்...!
தூத்துக்குடி: வழக்கம் போல தூத்துக்குடி மாநகரட்சிக் கூட்டம் கூச்சல் குழப்பங்களுடன், அமளி துமளிகளுடன் 3 நிமிடங்களிலேயே நடந்து முடிந்தது.
திமுக, அதிமுக கவுன்சிலர்களின் கடுமையான கூச்சல், குழப்பத்திற்கு கூட்டம் முடிவதாக மாநகராட்சி மேயர் அறிவித்து விட்டு வெளியேறினார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் அவசரக்கூட்டம் மேயர் (பொறுப்பு) சேவியர் தலைமையில் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் மதுமதி, மாநகராட்சி பொறியாளர்கள், அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதல்வருக்கு நன்றி
கூட்டம் துவங்கியவுடன், தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சி, சாலை வசதி, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாளசாக்கடை விரிவாக்க திட்டம் போன்றவற்றை செயல்படுத்த ரூ.320கோடி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி என்று மேயர் சேவியர் கூறினார்.

காட்டுராஜா தலைமையில்
இந்தநேரத்தில், திமுக உறுப்பினர்கள் கொறடா காட்டுராஜா தலைமையில் எழுந்து, வர இருக்கிற மாநகராட்சி மேயர் தேர்தலை முன்னிட்டே இதனை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தீர்மானங்கள் வாசிப்பு
இதனைத் தொடர்ந்து, தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. வல்லநாடு நீரேற்று நிலையத்தில் குடிநீர் கொண்டுவரப்படும் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய ஒரு லட்சத்து 54ஆயிரத்து 571ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட தீர்மானம் 4க்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வளவு செலவு செய்ததாக கூறப்பட்டாலும் தூத்துக்குடி மாநகர மக்களுக்கு 10நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதே அரிதாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

குழாய் உடைப்பைச் சரி செய்ய...
இதற்கு பதில் அளித்த கமிஷனர் மதுமதி, பொதுவாக குழாய் உடைப்புகளை சரி செய்ய குறைந்தது 24மணிநேரம் முதல் 36மணிநேரம் வரை என இரண்டு நாட்கள் ஆகும். இதனால் தான் மக்களுக்கு தாமதமாக குடிநீர் வழங்கப்படுகிறது என்றார.

ஆல் பாஸ்.. ஆல் பாஸ்!
இந்த பதிலை ஏற்காமல் திமுக உறுப்பினர்கள் கடும் வாதம் செய்ய அதிமுக உறுப்பினர்கள் வழக்கம்போல எதிர்வாதம் செய்ய ஆல்பாஸ் என்ற ரீதியில் 25தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

பெல்லடித்து வெளியறிய சேவியர்
நீண்டபெல்லை மேயர்(பொறுப்பு) சேவியர் அடிக்க கூட்டம் வழக்கம்போல மூன்று நிமிடத்தில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. வழக்கம்போல திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷம் போட்டபடியே கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

என்ன கூட்டமாக இருந்தாலும் சரி.. 3 நிமிடம்தான்!
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை அது சாதாரண கூட்டமாக இருந்தாலும் சரி, அவசர கூட்டமாக இருந்தாலும் சரி குறைந்தது 3அல்லது 5நிமிடங்களில் நடந்து முடிவது என்பது வழக்கமாகிவிட, வார்டு உறுப்பினர்களுக்கும் அது பழக்கமாகி விட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications