தொழிற்சாலை கழிவுகளுடன் குளத்தில் தேங்கிய மழை நீரால் பயனில்லை... வேதனையில் தூத்துக்குடி மக்கள்!
தொழிற்சாலைக் கழிவால் குளத்தில் தேங்கிய மழை நீரை பயன்படுத்த முடியவ்லிலை என்று தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி : ஓகி புயலால் பலத்த மழை பெய்து குளத்தில் தண்ணீர் தேங்கினாலும், அருகில் உள்ள வேதிப்பொருள் தொழிற்சாலை கழிவால் மழைநீர் நிறம் மாறி தூர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த முடியவில்லை என்று வேடநந்தம் பகுதி பொது மக்களும், விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வேடநந்தம் அருகே கடந்த ஒகி புயலால் பலத்த மழை கொட்டியது. இதில் அங்குள்ள குளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து கடல் போல் நீர் தேங்கியது. இதை பார்த்த பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சி மழை நின்று போனதால் காணாமல் போனது.

கிடைத்த மழை நீரை வைத்து விவசாயமும், பிற தேவைகளையும் பூர்த்தி செய்து விடலாம் என்று நினைத்தனர். தற்போது தண்ணீர் நிறம் கரும்பச்சையாக மாறி விட்டதால் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் தண்ணீரில் கடும் தூர்நாற்றம் வீசுவதால் துணிகள் துவைக்க கூட அதை உபயோகப்படுத்த முடியாமல் பொது மக்கள் தவிப்பில் உள்ளனர்.
குளத்தின் அருகில் வேதி பொருள் தொழிற்சாலை இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கெமிக்கல் கலந்து தண்ணீர் மாசுப்பட்டதா அல்லது வேறு காரணமா என்று தெரியாமல் விவசாயிகளும் குழம்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் ஓட்டப்பிடாரம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தாசில்தார் நம்பிராயர் மற்றும் பிடிஓ குளத்தை பார்வையிட்டு ஆய்வுக்காக தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர். ஆய்வு முடிவு வரும் வரை குளத்து நீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களையும், விவசாயிகளையும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications