தூத்துக்குடி கலெக்டரை மக்கள் வழிமறித்த பிறகு.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி சூழல்!
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறுத்ததால் போலீஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்சியர் தப்பி ஓடினார்.
இதன்பிறகுதான் போலீசார் மருத்துவமனையில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். அப்படியும் கலையாத மக்கள் மீது இதன்பிறகு, துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவரை தூத்துக்குடி காலை முதல் அமைதியாகவே இருந்தது.

2 ரவுண்டுகள் சுடப்பட்டன. நேற்றும்கூட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றபோது கலெக்டர் அலுவலகம் அருகே வைத்து சுட்டு கொல்லப்பட்டனர்.
கலெக்டர் ஆபீசில் இல்லாமல் எங்கேயோ போய்விட்டதாகவும் அவரை பார்த்து மனு கொடுத்துவிட்டுதான் செல்வோம் என்று தர்ணா செய்ததற்காக மக்கள் சுட்டு கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் கலெக்டரை எதிர்த்த பிறகு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. 12 பேர் கொல்லப்பட்ட பிறகும், இதுவரை மாவட்ட கலெக்டரையும், எஸ்பியையும் ஏன் மாற்றவில்லை என்று தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications