என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டம்- தி.வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது!
நெய்வேலி: ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், கூடுதல் சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 45-வது நாளாக இன்று வேலைக்கு செல்ல வில்லை.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. எனவே முற்றுகை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால் பேரணியாக சென்று நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலையில் நெய்வேலி 1-வது வட்டத்தில் உள்ள நேரு சிலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற்சங்கத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களும் திரண்டனர். எனவே அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அந்த இடத்துக்கு வந்தார். பின்னர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேல்முருகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
பிறகு திட்டமிட்டபடி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஒப்பந்த தொழிலாளர்கள் வேல்முருகன் தலைமையில் பேரணியாக சென்றனர். இந்த அமைத்து ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுத்து வேல்முருகன் உள்பட சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்தனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications