என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டம்- தி.வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது!
நெய்வேலி: ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உட்பட 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், கூடுதல் சம்பளம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 45-வது நாளாக இன்று வேலைக்கு செல்ல வில்லை.

தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. எனவே முற்றுகை, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால் பேரணியாக சென்று நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகையிடப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலையில் நெய்வேலி 1-வது வட்டத்தில் உள்ள நேரு சிலை பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற்சங்கத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர். என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களும் திரண்டனர். எனவே அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அந்த இடத்துக்கு வந்தார். பின்னர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வேல்முருகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
பிறகு திட்டமிட்டபடி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஒப்பந்த தொழிலாளர்கள் வேல்முருகன் தலைமையில் பேரணியாக சென்றனர். இந்த அமைத்து ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி மறுத்து வேல்முருகன் உள்பட சுமார் 2 ஆயிரம் பேரை கைது செய்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications