பீசா, சிப்ஸ், பர்கர் இனி இல்லை.. பல்கலை, கல்லூரிகளில் ஸ்நாக்ஸ்கள் விற்க தடை!
பல்கலை, கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காலேஜ்-க்கு செல்போன் கொண்டு போகக்கூடாது என்று உத்தரவு வந்ததும் கிறுகிறுத்துபோய் விட்டார்கள் மாணவர்கள். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்தே மீள முடியவில்லை. அதுக்குள்ளே இன்னொரு இடி.. இன்னொரு ஷாக்.. இன்னொரு ஆப்பு!
கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் நொறுக்கு தீனிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை இப்போது போட்டிருப்பது மத்திய மனித வளத்துறை அமைச்சகம்தான். இந்த ஜங்க் புட் எனப்படும் நொறுக்குத் தீனியை மாணவ, மாணவிகள் சாப்பிட்டால் அவர்களின் ஆரோக்கியம் சீக்கிரமாகவே கெட்டு விடுவதாகவும், அதனால் அவர்களின் உடம்பும் வெயிட் போட்டு விடுவதாக தெரிவித்துள்ளது.

ஸ்நாக்ஸ்-க்கு தடா
இப்படி உடல் எடையை கூட்டக்கூடிய, உடல்நலத்தை கெடுக்கக்கூடிய, பல்வேறு நோய்களுக்கு வழிவிடக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் இந்த நொறுக்குத் தீனி உணவு மற்றும் அதிகம் இனிப்பு கலந்த கூல்டிரிங்க்ஸ் விற்கவும் பல்கலைக்கழக மானிய குழு தடை கோரியுள்ளது. இதற்காக எல்லா கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கையையும் அனுப்பி வைத்துள்ளது. சுற்றறிக்கையில் இந்த விதியை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

சுண்டியிழுக்கும் பாக்கெட்டுகள்
வீட்டில் பெரியவர்கள் இந்த ஜங்க் புட் சாப்பிட வேண்டாம் என எவ்வளவோ சொல்லி பார்த்தும் சில பிள்ளைகள் அதனை காதில் கூட வாங்குவது கிடையாது. அந்த நொறுக்கு தீனியில் உப்பு, கொழுப்பு சத்துதான் அதிகம் உள்ளது. போதாக்குறைக்கு மாணவர்களை சுண்டியிழுக்கும் வகையில் கலர் கலர் பாக்கெட்கள் கடைகளில் தொங்கவிட்டு காண்பிப்பது. இதே யுக்திதான் கூல்டிரிங்க்ஸ்-ல் கடைப்பிடிக்கப்படுகிறது.

மாணவர்கள் உணர வேண்டும்
இனி, பீசா, பர்கர், சிப்ஸ், கேக்குகள், குக்கீஸ், கூல்டிரிங்க்ஸ் எதுவுமே காலேஜ், பல்கலை காம்பவுண்டுக்குள் வராது என திடமாக பெற்றோர்கள் நம்பலாம். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும், சின்ன வயதிலேயே நோய்களுக்குள் சிக்கி விட கூடாது என்பதற்காகவும்தான் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதை மாணவர்கள் உளமார உணர வேண்டும்.

ஆரோக்கியம் சிறக்கட்டும்!
ஆசைப்பட்டதை சாப்பிட முடியாமல் ஆப்பு வைத்துவிட்டார்களே என்று சில மாணவர்கள் தவறாக நினைத்துவிட கூடாது. அதேசமயம், தடை செய்யப்பட்ட எல்லாவற்றையும் வெளியில் வாங்கி சாப்பிட்டு கொள்ளலாம் என்று நினைத்தால், அதுதான் மாணவர்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக் கொள்ளும் ஆப்பு! புரியவில்லை... சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது! இனியாவது மாணவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கட்டும்!
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications