உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க கோர்ட் உத்தரவு
சென்னை: மதுரை மாவட்டம் உத்தப்புரம் கலவர வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா 60,000 ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உத்தபுரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தீண்டாமை சுவரை 2008-ம் ஆண்டு இடித்த போது கலவரம் வெடித்தது. அப்போது, அப்பாவி பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது.

இதில், குற்றம்சாற்றப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரியும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட பிரிவினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஜனநாயக மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பொன்னுத்தாய், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 60,000 ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்கவில்லை.
இதனையடுத்து, பொன்னுத்தாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்ரமணியம் மற்றும் கிருபாகரன் அடங்கிய அமர்வு, உத்தபுரம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 199 பேருக்கு தலா ரூ. 60,000 இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஏற்கனவே இடைக்கால நிவாரணமாக வழங்கிய தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும், இழப்பீட்டு தொகையை இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications