வடபழனி புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.. பொதுமக்களே திறந்து வைத்தனர்
வடபழனி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சென்னை: சென்னை, வடபழனியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் இன்று காலை முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. அரசு திறக்காததால் பொதுமக்களே பாலத்தை திறந்து வைத்தனர்.
சென்னை வடபழனி சிவன் கோவில் அருகில் தொடங்கும் புதிய மேம்பாலப் பணிகள் முடிந்த போதும் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படாமல் இருந்தது. சென்னை வடபழனி 100 அடி சாலையில் ரூ.56 கோடி செலவில் மேம்பாலம் கட்ட கடந்த 2011ல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் பணி மேம்பால பணி நடந்ததால் வடபழனி சிக்னல் அருகே மேம்பாலம் கட்டும் பணி தாமதம் ஏற்பட்டது.

பின்னர் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருந்தது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த இடத்தில் அமைந்துள்ள மேம்பாலம் திறந்துவிடப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வாகன ஓட்டிகளே பேரிகார்டை அகற்றி பாலத்தை பயன்படுத்த தொடங்கினர். இதையடுத்து மீண்டும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு போலீசார் பேரிகார்டை அமைத்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பேரிகார்டை அகற்றி பொதுமக்களே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். திறப்பு விழா நிகழ்ச்சி எதுவும் நடைபெறாமல் இன்று காலை முதல் பொதுமக்கள் அந்த மேம்பாலத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications