ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து.. நேரம் ஒதுக்கவில்லையா வித்யாசாகர் ராவ்?
ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைகளை தவிர்க்க ஆளுநர் இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
சென்னை: காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து அரசியல் நிலவரம் பற்றி பேசப்போவதாக தகவல் வெளியான நிலையில் மனிதர் அமைதியாகிவிட்டார்.
காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 10 மணிக்கெல்லம், ஆளுநருடன் வைகோ சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.
ஆளுநர் தனது நீண்ட கால நண்பர் என்று வைகோ கூறிவந்த நிலையில், இவர் ஆளுநரிடம் எதைப்பற்றி பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. யாருக்காக பேசப்போகிறார் என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்தது.
இந்நிலையில், ஆளுநர்-வைகோ சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. சர்ச்சைகளை தவிர்க்க ஆளுநர் இந்த சந்திப்பை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
60sec- காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து அரசியல் நிலவரம் பற்றி பேசப்போவதாக தகவல் வெளியான நிலையில் மனிதர் அமைதியாகிவிட்டார்.












Click it and Unblock the Notifications