கூட்டணியை வழி நடத்தப் போகும் வைகோ.. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை?
சென்னை: மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், தேமுதிகவின் ஒருங்கிணைப்பாளராகவும் டபுள் போஸ்ட்டிங்கைப் பெற்றுள்ள வைகோ, வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் போட்டியிட மாட்டார் என்கிறார்கள். திருமாவளவன் மற்றும் முத்தரசன் ஆகியோர் மட்டும் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலில் தனது அணியின் முழு வெற்றியை உறுதி செய்யும் வகையில் தீவிரப் பிரசாரம், வழிகாட்டல், திட்டமிடல் என கவனம் செலுத்தப் போகிறாராம் வைகோ. அவருக்குத் துணையாக ஜி.ராமகிருஷ்ணன் செயல்படப் போகிறாராம்.

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்
தங்களை விட பல வகையிலும் ஜூனியரான விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து களம் இறங்கியுள்ளனர் மக்கள் நலக் கூட்டணியினர்.

பிரமாண்டக் கூட்டம்
அடுத்து பிரமாண்ட பொதுக் கூட்டம் போடவுள்ளனர். சென்னையில் அடுத்த மாதம் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் வைகோ
இந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ செயல்படுகிறார். எனவே அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம்.

ஜி.ரா போட்டியிட ரைட்ஸ் இல்லை
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் போட்டியிடக் கூடாதாம். எனவே அவரும் போட்டியிட மாட்டாராம்.

தீவிரப் பிரசாரம்
தேர்தல் பிரசாரத்தில் வைகோ தீவிரமாக ஈடுபடவுள்ளாராம். இவரது பேச்சுக்குத்தான் வெயிட் இருக்கும் என்பதால் முழு அளவில் 234 தொகுதிகளுக்கும் வைகோ பிரசாரம் செய்யப் போவார் என்று கூறப்படுகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications