கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு கொடநாடு ஒரு கேடா: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: கும்பி எரியுது, குடல் கருகுது, குளுகுளு கொடநாடு ஒரு கேடா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் தேமுதிக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

விழாவில் அவர் பேசுகையில்,
கும்பி எரியுது, குடல் கருகுது, கொடநாடு ஒரு கேடா. குளுகுளு கொடநாட ஒரு கேடா என கேட்கிறேன் மக்களே. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் அவங்க சோற்றில் கை வைக்க முடியும். பருப்பு வகைகளின் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளது.
தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்காக சிறை நிரப்பும் போராட்டம் நடக்கையில் நான் என் மனைவி, மகன்களோடு வருவேன். நீங்கள் எல்லாம் வருவீர்களா என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications