வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தராத தமிழக அரசு- விஜயகாந்த் பாய்ச்சல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிவாரணம் தரவில்லை என விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சாடியுள்ளார்.
சேலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

மழை வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவியையும் தமிழக அரசு வழங்கவில்லை.
சென்னையில் ஒருநாள் பெய்த மழைக்கே மாநகராட்சியால் தாங்க முடியவில்லை. சென்னையில் பலநாட்கள் கனமழை பெய்தால் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது.
தமிழகத்தில் தேமுதிக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications