தூத்துக்குடிக்கு கேரள கழிவுகளுடன் வந்த லாரி... அதிரடியாக களம் இறங்கிய பேரூராட்சி நிர்வாகம்!
தூத்துக்குடியில் கேரள கழிவுகளுடன் வந்த லாரியை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மடக்கி பிடித்த அபராதம் விதித்த சம்பவம் அங்கு கழிவுகளை கொண்டு வரும் லாரிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடியில் கேரள கழிவுகளுடன் வந்த லாரியை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் மடக்கி பிடித்த அபராதம் விதித்த சம்பவம் அங்கு கழிவுகளை கொண்டு வரும் லாரிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றுக்கு கீழ் பகுதி கரையோரத்தில் காட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றை அழகுப்படுத்தும் பணியை கலெக்டர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். கரையோரத்தில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் கொட்டப்பட்டு மங்கும், மங்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாமிரபரணி நதிக்கரையில் கேரள கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்வதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு நிலை இருப்பதாகவும் பொது மக்கள் புகார் கூறினர்.
இதை தொடர்ந்து பேரூராட்சி பணியாளர்கள் தாமிரபரணி ஆற்று பகுதியை தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். இரவில் கேரளாவில் இருந்து தூத்துக்குடி வழியாக கோழி கழிவுகளை கொட்ட வந்த லோடு ஆட்டோவை பேரூராட்சி செயல் தலைவர் மணிமொழியான் ரெங்கசாமி பறிமுதல் செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கோழி கழிவுகளை கொட்ட வந்ததற்காக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications