அடிதடிக்குப் பிறகும் தொடர்ந்து வாக்குப்பதிவு.. தேர்தலை நிறுத்த சரத் முயற்சிப்பதாக விஷால் அணி புகார்
சென்னை: நடிகர் சங்க தேர்தல் நடந்த வாக்கு மையத்தில் ஏற்பட்ட மோதலில் நடிகர் விஷால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் தேர்தலை நிறுத்த சரத்குமார் தரப்பு முயற்சித்ததாக விஷால் அணி புகார் கூறியது.
நடிகர் சங்க தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் சரத்குமார் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில் வாக்கு மையத்தில் வாக்களிக்க வந்தவர்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு இரு அணியினரும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலில் முடிந்தது. இந்த மோதலில் சிக்கி நடிகர் விஷால் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிந்த பிறகு அவரை அழைத்துச் சென்று கேரவனில் ஓய்வெடுக்க வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வந்ததாகவும், ஆனால் தேர்தலை நிறுத்த சரத்குமார் தரப்பு முயற்சித்ததாகவும் விஷால் அணியினர் புகார் தெரிவித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications