அப்துல் கலாம் நினைவிடத்தில் போட்டோ எடுக்க தடை.. பார்வையாளர்கள் ஏமாற்றம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலுள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடம், பாதுகாப்புத்துறை சார்பில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அருகே பகவத்கீதை புத்தக சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது.

கலாம் அருகே கீதை புத்தகம் இருப்பது தமிழகத்தில் பல்வேறு மட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கலாமின் உறவினர்கள், கலாம் சிலை அருகே குர்ஆன் மற்றும் பைபிள் ஆகிய இஸ்லாமிய, கிறிஸ்தவ புனித நூல்களை வைத்துச் சென்றனர். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கலாம் நினைவிடத்திற்கு செல்லும் மக்கள் புகைப்படம் எடுக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தின் வெளியே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சிலை அருகே புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில், மத்திய பாதுகாப்புத்துறையின் டிஆர்டிஓ கட்டுப்பாட்டில்தான் கலாம் நினைவகம் உள்ளது. போட்டோ எடுக்க விதிக்கப்பட்ட தடை குறித்து டிஆர்டிஓ இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications