‘நான் பைத்தியம் போல் விளையாடுகிறேன்’.. செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஓய்வு பெற முடிவு
இந்தியாவின் செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக, தகவல்வெளியாகியுள்ளது.
சென்னை: சர்வதேச செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் போட்டிகளிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னையை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஆனந்த். சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவர், சமீபகாலமாக, போட்டிகளில் எதிர்பாராத வகையில் சரிவை சந்தித்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகாலமாக, செஸ் அரங்கில் உச்சத்தில் இருந்துவரும் விஸ்வநாதன் ஆனந்த், கடந்த 4 ஆண்டுகளாக, தனது மேஜிக்கை நிகழ்த்த முடியாமல், செஸ் போட்டிகளில், மிகவும் திணறி வருகிறார். இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனந்தை திணறடிக்கும் கார்ல்சென்
இவருக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள கார்ல்சென், ஆனந்தைவிட அதிகளவு நேர்த்தியாக, தொழில்முறை செஸ் போட்டிகளில் ஆடி வருகிறார். இது, விஸ்வநாதன் ஆனந்தை மிகவும் யோசிக்க வைத்துள்ளது.

ஜொலிக்காத ஆனந்த்
அவருடன் மோதிய சமீபத்திய போட்டிகளில், ஆனந்தால் பெரிதும் சோபிக்க முடியவில்லை. தன்னைவிட கார்ல்சென் சிறப்பாக விளையாடுவதாக, ஆனந்த் பலமுறை கூறியுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில், கிராண்ட் செஸ் டூர் விளையாட்டுப் போட்டிகளில், 18 புள்ளிகளுக்கு, 8 புள்ளிகளை மட்டுமே ஆனந்த் பெற்றுள்ளார். இது ஆனந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன ஆனது ?
இந்த போட்டிகளின் முடிவாக, செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், நான் ஒரு பைத்தியம் போல விளையாடுகிறேன். எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இப்படி விளையாடுவதை நான் விரும்பவில்லை. இந்த அர்த்தமற்ற ஆட்டத்தை நீண்ட நாள் தொடரக்கூடாது என்றே நினைக்கிறேன்,'' எனக் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற முடிவு
இதன்மூலமாக, அவர் செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாகவும், இதன் தாக்கமே, அவரது வார்த்தைகளில் காணப்படுவதாகவும் விளையாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications