விஜயகாந்த் பேசியது 17 நிமிஷம்.. ஆனால் சுவாரஸ்யம் இல்லையே.. மக்கள் ஏமாற்றம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மணல் கொள்ளையும், கொலைகளும் தொடர்கதையாகி வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு காவல் துறை, ஏவல் துறையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக துணைப் பொதுச்செயலர் மல்லை சத்தியா காஞ்சிபுரத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த், காஞ்சிபுரம் தேரடியில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

காஞ்சிபுரத்தில் மணல் கொள்ளையும் கொலைகளும் தொடர்கதையாகி உள்ளன. இங்கு காவல் துறை, ஏவல் துறையாக உள்ளது. குடும்ப அட்டைக்கு மணல் விற்பதாக அரசு அறிவிக்கிறது. போலி அட்டைகளைத் தயாரித்து வைத்திருக்கும் அதிமுகவினரே அந்த மணலை வாங்கி, வெளியில் விற்றனர். அதற்காக 2-வது விற்பனைக்கும் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தமிழக மக்கள் மாறி மாறி வாக்களித்து ஏமாந்தது போதும். எங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளர் மல்லை சத்தியாவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
முதல்வர் ஜெயலலிதா, உணவகம், மருந்தகம், குடிநீர் விற்பனையைத் தொடங்கி அம்மா பெயரை வைத்துக்கொண்டார். ஆனால் அவர் தொடங்கிய டாஸ்மாக்கிற்கு அம்மா பெயரை வைத்திருக்கலாமே. இதற்கு அதிமுகவினரால் பதில் சொல்ல முடியாது.
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை நாங்கள் கொடுக்கிறோம். மத்தியில் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்ய வேண்டுமென்றால், நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால், மோடி பிரதமராக வேண்டும். அதற்கு எங்கள் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
கூட்டணி கட்சிகளிடையே பிரச்சினைகள் இருக்கலாம். அதை பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்றார் அவர்.
காஞ்சிபுரத்திற்கு மாலை 5.10 மணிக்கு வந்த விஜயகாந்த், 5.27 மணி வரை, 17 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இவரைப் பார்க்கவும் இவரது பேச்சை கேட்கவும் ஏராளமான மக்கள் கூடினர். ஆனால் அவரது பேச்சில் சுவாரஸ்யம் இல்லாததாலும் அதிக நேரம் பேசாததாலும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications