Breaking News: நாங்கள் 3-ஆவது அணி இல்லை... தெலுங்கானா முதல்வர்
சென்னை: ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நாங்கள் 3-ஆவது அணி இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார்.
தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-ஆவது அணிக்கு ஆதரவு கேட்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறுகையில், 3-ஆவது, 4-ஆவது அணி அமைக்க திட்டம் இல்லை, நாங்கள் 3-ஆவது அணி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
Chennai: Telangana Chief Minister K. Chandrashekar Rao arrives at the residence of DMK's M. Karunanidhi pic.twitter.com/LRqllLJ7K8
— ANI (@ANI) April 29, 2018