For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: நாங்கள் 3-ஆவது அணி இல்லை... தெலுங்கானா முதல்வர்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நாங்கள் 3-ஆவது அணி இல்லை என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார்.

தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார்.

திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 3-ஆவது அணிக்கு ஆதரவு கேட்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ் கூறுகையில், 3-ஆவது, 4-ஆவது அணி அமைக்க திட்டம் இல்லை, நாங்கள் 3-ஆவது அணி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

Newest First Oldest First
4:50 PM, 29 Apr

மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, அதிகாரங்கள் தேவைப்படுவது குறித்து விவாதித்தோம்
4:50 PM, 29 Apr

கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்குவதில் மத்திய அரசு சரிவர செயல்பட வில்லை
4:50 PM, 29 Apr

மாநில சுயாட்சி குறித்து ஸ்டாலினிடம் விவாதித்தேன்
4:50 PM, 29 Apr

மத்திய, மாநில அரசு உறவுகள் குறித்து விரிவாக ஸ்டாலினிடம் பேசினேன்
4:50 PM, 29 Apr

3ஆவது, 4ஆவது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை
4:50 PM, 29 Apr

2004ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி உள்ளேன்
4:49 PM, 29 Apr

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி
4:49 PM, 29 Apr

சகோதரர் ஸ்டாலினுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினேன்- சந்திரசேகர ராவ் பேட்டி
4:48 PM, 29 Apr

அம்மா அணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திவாகரன் நியமனம்
4:38 PM, 29 Apr

எதிர்வரும் அரசியல் சூழலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதித்தோம்
4:38 PM, 29 Apr

ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது
4:38 PM, 29 Apr

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி குறித்து விவாதித்தோம்
4:38 PM, 29 Apr

சென்னையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவை சந்தித்த பின்னர் ஸ்டாலின் பேட்டி
4:38 PM, 29 Apr

அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை- ஸ்டாலின்
4:38 PM, 29 Apr

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
4:38 PM, 29 Apr

நீரும் சோறும் வேண்டும், மீத்தேன் வேண்டாம் என்ற வாசகம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
4:37 PM, 29 Apr

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
3:40 PM, 29 Apr

சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
3:40 PM, 29 Apr

மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு
3:40 PM, 29 Apr

காவிரிக்காக போராட்டம் நடத்த மக்கள் கூடிவிடக்கூடாது என போலீஸ் கெடுபிடி
3:40 PM, 29 Apr

மெரினாவில் போலீஸ் கெடுபிடியால் பொதுமக்கள் சிரமம்
2:22 PM, 29 Apr

திவாகரனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது - தினகரன்
2:22 PM, 29 Apr

யாருடைய தூண்டுதலில் திவாகரன் செயல்படுகிறார் என்பது மக்களுக்கு விரைவில் தெரியும்
2:22 PM, 29 Apr

திவாகரன் தனிக்கட்சி தொடங்கியது குறித்து தினகரன் கருத்து
2:21 PM, 29 Apr

கருணாநிதியுடனான சந்திப்புக்கு பிறகு ஸ்டாலினை சந்தித்தார் தெலுங்கானா முதல்வர்
2:21 PM, 29 Apr

3-ஆவது அணி குறித்து அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்
2:11 PM, 29 Apr

11 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் நீதித் துறை சரியாக செயல்படவில்லை- தங்கதமிழ்செல்வன்
2:11 PM, 29 Apr

குட்கா வழக்கிலும் சிபிஐ சரியாக செயல்படவில்லை
2:11 PM, 29 Apr

11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சி தாவல் தடை சட்டம் தேவையில்லையே- தங்கதமிழ்செல்வன்
2:02 PM, 29 Apr

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு
READ MORE

English summary
Telangana CM Chandrasekar Rao meets MK Stalin for discuss about 3rd front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X