மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை சின்னம்.. நீதிமன்றத்தில் அப்பீல்: புகழேந்தி அதிரடி
Recommended Video

சென்னை: இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட உள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் டிவி சேனலுக்கு பேட்டியளித்தார் கர்நாடக மாநில புகழேந்தி.
இவர் டிடிவி தினகரன் ஆதரவாளராக அறியப்படுபவர். சசிகலாவுக்கும் நெருக்கமானவர்.

அதிகாரப்பூர்வ தகவல்
புகழேந்தி மேலும் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. டிவி சேனல்களில் வெளியான செய்தி அடிப்படையில்தான் நான் கருத்து சொல்கிறேன்.

அதிமுக வேறு கதை
ஒருவேளை அப்படி எதிரணிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால் அது அநீதியாகும். உ.பி.யில் தந்தை மகன் நடுவே தகராறு நடைபெற்று சின்னத்திற்காக சமாஜ்வாதி கட்சியினர் சண்டை போட்டதையும், அதிமுக விவகாரத்தையும் ஒன்றாக கருத முடியாது.

அவசரம்
அதிமுகவில் பொதுச்செயலாளர் யார் என்பதே இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பல வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், அவசரமாக இந்த தீர்ப்பை வெளியிட வேண்டிய அவசியமே இல்லை.

உள்ளாட்சி தேர்தல்
அவசரமாக சின்னத்தை ஒதுக்கி அவசரமாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது, இடைத் தேர்தலை நடத்துவது போன்ற வேலைகளில் எடப்பாடி அணி ஈடுபட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் போவோம்
உடனடியாக இந்த தீர்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். எங்கள் அணியில் எந்த வித குழப்பமும் கிடையாது. இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications